தூத்துக்குடி: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார்.
மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மூவர்ண தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
பின்னர் காவல்துறை, வேளாண் துறை, மருத்துவத்துறை, ஆகிய பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை வழங்கி கௌரவித்த அவர், பின்னர் 540-பயனாளிகளுக்கு 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.