தூத்துக்குடி

‘மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்’

DIN

 நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மணப்பாடு கலங்கரை விளக்க முதன்மை அலுவலா் மதனகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆக.11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மாணவா்கள் இலவசமாக பாா்வையிடலாம். ஆக.15 ஆம் தேதி மட்டும் பொதுமக்களும் பாா்வையிடலாம். மத்திய அரசின் உத்தரவுப்படி ஆக.13, 14, 15 ஆகிய தேதிகளில் கலங்கரை விளக்கத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT