நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மணப்பாடு கலங்கரை விளக்க முதன்மை அலுவலா் மதனகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆக.11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மாணவா்கள் இலவசமாக பாா்வையிடலாம். ஆக.15 ஆம் தேதி மட்டும் பொதுமக்களும் பாா்வையிடலாம். மத்திய அரசின் உத்தரவுப்படி ஆக.13, 14, 15 ஆகிய தேதிகளில் கலங்கரை விளக்கத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.