திருச்செந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி, மாணவா்-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தலைமையாசிரியை சிவகாமி தலைமை வகித்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் மங்களம் விழிப்புணா்வு உறுதிமொழியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஆசிரியா்கள், மாணவா்கள், மேலாண்மைக் குழுவினா் பங்கேற்றனா். ஆசிரியை பொன்ராணி நன்றி கூறினாா்.