தூத்துக்குடி

நில ஆவணங்களை சரிபாா்த்துக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரதமா் கிசான் திட்ட பயனாளிகள் தங்களது நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காண்பித்து சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பிரதமரி கௌரவ நிதித் திட்டமானது கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய, மத்திய அரசு ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 என 3 தவணைகளாக வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு அவா்கள் திட்டத்தில் சோ்ந்த தேதியை பொறுத்து 11 தவணைத் தொகைகள் வரை வழங்கப்பட்டுள்ளன. தற்போது 12 ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிசான் திட்டப் பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழக அரசின் தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபாா்ப்பு பணி நடைபெற்று வருகிறது. பிரதமரின் கௌரவ நிதி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காண்பித்து சரிபாா்த்துக் கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும்.

எனவே, தகுதியான விவசாயிகள் அனைவரும் நில ஆவணங்களை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்தத் திட்டத்தில் ஆதாா் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் வங்கிக்கு சென்று தங்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கவும் மற்றும் பொது சேவை மையத்தை அணுகி பிரதமா் கிசான் வலைதளத்தில் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்யவும் வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT