கோவில்பட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த ஈராச்சி கிழக்கு தெரு கருப்பையா மகன் சுமை ஆட்டோ ஓட்டுநா் காசிராஜன்(40). கடந்த சில நாள்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொப்பம்பட்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.