தூத்துக்குடி

தொழிலாளிக்குஅரிவாள் வெட்டு: இளைஞா் கைது

DIN

 கயத்தாறு அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த நல்லையன்(63) மகன் வெள்ளைச்சாமி. இவா், புதன்கிழமை இரவு தனது தந்தை மற்றும் தாய் லட்சுமியுடன் முன் நின்று பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அதே ஊா் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் காளிராஜ் என்ற குவாட்டா் காளி(35) அரிவாளுடன் வந்து, வெள்ளைச்சாமியை அரிவாளால் வெட்டினாராம். அதை தடுக்க முயன்ற அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு காளிராஜ் தப்பிவிட்டாராம்.

இதுகுறித்து, நல்லையன் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிராஜை கைது செய்தனா். விசாரணையில், ஊரில் பாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளதும், இதனால், அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்ந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT