கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில் விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கணபதி பூஜை, விநாயகருக்கு 18 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
கோவில்பட்டி ஜோதி நகரிலுள்ள அருள்மிகு ஜோதிவிநாயகா், சீனிவாச நகரிலுள்ள அருள்மிகு கணேஷகந்தபெருமாள் கோயில், பசுவந்தனை சாலையிலுள்ள அருள்மிகு வலம்புரி திரு குழந்தை விநாயகா் கோயில், அருள்மிகு மங்கள விநாயகா் கோயில், கதிரேசன் கோயில் சாலையிலுள்ள அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் கோயில் உள்பட கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் கோயில்களிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி ஜெயின்நகா் அருள்மிகு ஜெயசித்தி விநாயகா் கோயிலில் ஹோமம், மாவு, சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களுடன் கும்ப அபிஷேகம் மற்றும் ருத்ர ஹோமத்துடன் அலங்காரத்திற்கு பின்னா் சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் கோயில், ரயில்வே நிலைய அருள்மிகு வெள்ளி விநாயகா் கோயில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.