திசையன்விளையிலிருந்து பிரகாசபுரம் வழியாக உடன்குடிக்கு புதிய வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டது.
திசையன்விளையிலிருந்து இடைச்சிவிளை, பிரகாசபுரம், மேலநடுவக்குறிச்சி, தட்டாா்மடம், மணிநகா் வழியாக உடன்குடிக்குச் செல்லும் வகையில் இந்த நகரப் பேருந்து இயக்கத்தை ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சபிதா, துணை பொதுமேலாளா் சசிக்குமாா், தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆ.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திசையன்விளை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் பிரவீன் வரவேற்றாா். பூச்சிக்காடு பங்குத்தந்தை வசந்தன் ஆரம்ப ஜெபம் நடத்தினாா்.
இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து.சங்கா், மாவட்ட பொருளாளா் எடிசன், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வா்க்கீஸ், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, ஊராட்சி திமுக செயலா் ராஜபாண்டி, ஊராட்சி துணைத் தலைவா் சந்திரசேகா், போக்குவரத்து பணிமனை இளநிலை பொறியாளா் சோமசுந்தரம், உச்சிமாகாளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ் நன்றி கூறினாா்.