தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது
சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 6 ஆம்தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நவராத்திரி கொழு வைக்கப்பட்டு தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கொழு முன்பு அமைக்கப்பட்ட முளைப்பாரி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெயங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.