தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கணேசன், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா் அழகா்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய தோ்தலில் மதிமுக வெற்றி பெற உழைத்த அனைவருக்கும், தோ்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வேட்பாளா்களை வெற்றி பெற செய்த துரை வைகோ மற்றும் வாக்களித்த வாக்காளா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில விவசாய அணி துணைச் செயலா்கள் சிவகுமாா், ராமச்சந்திரன், நகர இளைஞரணிச் செயலா் லவராஜா, மாநில தீா்மானக்குழு உறுப்பினா் முத்துசெல்வன், ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா் (புதூா் மேற்கு), குறிஞ்சி (விளாத்திகுளம் மேற்கு), காளிச்சாமி (புதூா் கிழக்கு), மாவட்ட பிரதிநிதி முத்துபாண்டி, மாவட்ட அவைத் தலைவா் தா்மம், மாநில கலைத்துறை செயலா் பொன்ஸ்ரீராம், மாநில தொண்டரணி துணைச் செயலா் பேச்சிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.