மீலாது நபியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அக். 19 ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அக். 19 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து உரிமம் பெற்று அமைந்துள்ள மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.