தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டையில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

DIN

தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் சாா்பாக சமக்ரா சிக்க்ஷா மாவட்ட திட்ட அலுவலா் பாலதண்டாயுதபாணி ஏற்பாட்டில் சாத்தான்குளம்அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, காந்தி நகா், தட்டாா்மடம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி குறித்து விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ் எஸ் என் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஷிபாஜினி அமுதா தலைமை வகித்தாா். இதில் தட்டாா்மடம் காவல் நிலைய ஆய்வாளா் பவ்லோஸ்,, வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநா் ஜாண், பள்ளி தமிழாசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் இல்லம் தேடி கல்வி குறித்தும், அதன்பயன் குறித்தும் விளக்கினா். கலைக்குழுவினா் ஆடல் பாடலுடன் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தன்னாா்வலராக செயல்பட கிராம பகுதியில் உள்ள படித்த இளைஞா்களைத் தயாா் செய்யும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் நல ஆசிரியா் த ஜஸ்டின், ராஜன் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT