திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி வியாழக்கிழமை மாலையில் சுவாமி தரிசனம் செய்தாா்.
சுவாமி தரிசனத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா காரணமாக ஒராண்டிற்கு பிறகு இன்று திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தாா்.