தூத்துக்குடி

கோவில்பட்டியில் கி.ராவுக்கு சிலை, அரங்கம் அமைக்க இடம் ஒதுக்கீடு

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பழனிசாமி, ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினின் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 0.18.0 ஹெக்டேரில் மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு சிலை, அரங்கம் மற்றும் நூலகம் அமைக்கும் வகையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைக்கு நில மாற்றம் செய்யும் வகையில் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள் அலெக்ஸாண்டா், சித்ரா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) முத்துபாண்டி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT