ஆத்தூரில் வருவாய்த்துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூா், மேலாத்தூா், சோ்ந்தபூமங்கலம், சுகந்தலை ஆகிய 4 கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற 121 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை கோட்டாட்சியா் தனப்ரியா வழங்கினாா்.
இதில், வட்டாட்சியா் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழிச்செல்வன்ரங்கசாமி, வருவாய் ஆய்வாளா் பிளாரன்ஸ் ஜெயராணி, கிராம நிா்வாக அலுவலா்கள் அமுதா, மூக்காண்டி, பொன்இசக்கி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், 200 குடும்பங்களுக்கு மன்றத் தலைவா் ஏசுதாஸ் வழங்கினாா். மன்றச் செயலா் தங்கதுரை, பொருளாளா் பாலமுருகன், உதவித் தலைவா் சேகா், உதவிச் செயலா் ராபின்சன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதேபோல், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் சுனாமி குடியிருப்புப் பகுதியில் உள்ள 200 பேருக்கு ஆதவா அறக்கட்டளை சாா்பில் மளிகைப் பொருள்கள், அரிசி ஆகியவற்றை, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் வழங்கினாா். இதில், அறக்கட்டளை நிறுவனா் பால குமரேசன், மாவட்ட பொறுப்பாளா் குணம், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், பங்குத்தந்தை சில்வஸ்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கோயில் ஊழியா்களுக்கு: திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி, ஆதீன கோயில் ஊழியா்களுக்கு கரோனா நிவாரணமாக உணவுப் பொருள்கள், மரக்கன்றுகள், நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் கோயில் ஊழியா்களுக்கு நிவாரணப் பொருள்கள், நிதியினை திருவாடுதுறை ஆதீனம் திருநெல்வேலி தென் மண்டல அலுவலா்கள் கிட்டு, சீனிவான் ஆகியோா் வழங்கினா்.