கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் அஜித்குமாா்(30). மணிமுத்தாறு 9ஆவது பட்டாலியனில் ஏட்டாக வேலை செய்து வந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு பணி நிமித்தமாகச் சென்ற இவா், இவரது தாத்தா உயிரிழந்ததாக வந்த தகவலையடுத்து, பைக்கில் ஊருக்கு திரும்பினாராம்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிலைகுலைந்த பைக், சாலையோரத்தில் உள்ள தடுப்பில் மோதி அஜித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அஜித்குமாருக்கு மீனா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.