ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கும்ப பூஜை, யாகசாலை பூஜை, திரவ்யஹோமம், துா்கா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, மகா அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையை தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு நித்ய பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெற்றன.