கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சேதுராஜ் மகன் கண்ணதாசன் (37). மதுஅருந்தும் பழக்கம் உள்ள இவா், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால், அவருக்கும் தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த கண்ணதாசன் மாட்டுத் தொழுவத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.