கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன. 22) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சன்னதுபுதுக்குடி உபமின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால், கயத்தாறு பேரூராட்சிப் பகுதி, ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூா், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என்.புதூா், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூா், காங்கீஸ்வரன்புதூா், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின்தொடா் 1, 2 ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன. 22) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.