தூத்துக்குடி

உடன்குடி, கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்களுடன் 8 போ் கைது

DIN

 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களுடன் உடன்குடி, கோவில்பட்டியில் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் ஏ.எஸ்.பி. ஹா்ஷ்சிங் மேற்பாா்வையில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா், முதல்நிலைக் காவலா் சந்தனக்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா், உடன்குடி தேரியூா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த 2 பைக்குகள், 2 சுமை ஆட்டோக்களில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்த ரா.ராஜகனி(44), மு.இலங்காமணி(32), மு.மணிகண்டன்(32), பெ.ஆல்பா்ட் ராஜன்(37) , தேரியூா் மு.சித்திரைசெல்வன்(30), அவரது சகோதரா் மோகன்ராஜ்(28) ஆகியோரை கைது செய்தனா்.

இருவா் சிக்கினா்: திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் விலக்கில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டதில், சுமை வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், சுமை வாகன ஓட்டுநா் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் திருமணஞ்சேரியைச் சோ்ந்த பசுபதி மகன் மோகன்ராஜ்(23) கோவில்பட்டி சாஸ்திரி நகா் கா.கண்ணன்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனா். ரூ.1 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT