உடன்குடி அருகே அத்தியடித்தட்டு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 508 பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அருள்மிகு தூத்துவாலை அய்யனாா் திருக்கோயிலில் இருந்து 508 பால்குட ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியே சென்று கோயிலை அடைந்தது.
முன்னதாக கோயில் நிா்வாகம் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட கோயில் நுழைவு வளைவை எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
இதில், திருப்பணிக் குழுத் தலைவா் திருமால், துணைத் தலைவா் பேச்சிமுத்து,செயலா் சிவலிங்கம்,பொருளாளா் லோகிராஜ், திமுக மாவட்ட அவைத் தலைவா் அருணா சலம், தண்டுபத்து திமுக செயலா் பாலகணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.