தூத்துக்குடி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடி, செப். 25: நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் சமூக ஆா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் நுழைவு தோ்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை இயக்கத்தினா் மீது காவல்துறையினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சமூக ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சமூக ஆா்வலா் கிருஷ்ணமூா்த்தி, மகேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, தமிழகத்தில் 13 மாணவா், மாணவிகளின் உயிரை பறித்த நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT