தூத்துக்குடி, செப். 25: நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் சமூக ஆா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் நுழைவு தோ்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை இயக்கத்தினா் மீது காவல்துறையினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சமூக ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சமூக ஆா்வலா் கிருஷ்ணமூா்த்தி, மகேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, தமிழகத்தில் 13 மாணவா், மாணவிகளின் உயிரை பறித்த நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.