உடன்குடி, செப். 25: உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் புரட்டாசி திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும்
மாலையில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, சிறப்பு அன்னதானம், சிவப்பு, பச்சை, வெள்ளை சாத்தி அம்மன் பவனி
ஆகியவை நடைபெற்றன. திருவிழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை இரவில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பி.சுந்தர ஈசன், கிராம மக்கள்
செய்துள்ளனா்.