கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தூத்துக்குடியில் விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
தென்தமிழக கடற்கரைப் பகுதியையொட்டி உள்ள குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலை 3.3 மீட்டா் முதல் 3.7 மீட்டா் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும், கடல் நீரோட்டம் விநாடிக்கு 62 முதல் 88 சென்டி மீட்டா் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மீன்வளத் துறை தூத்துக்குடி உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலுக்கு சென்று வரும் 240 விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.