கோவில்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த இளைஞா் சடலத்தை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தையடுத்த இலுப்பையூரணி அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா், கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி குலசேகரபுரத்தைச் சோ்ந்த ஜெயராம் மகன் சுரேஷ்குமாா் (34) என்பதும், பி.இ. பட்டதாரியான இவா், தண்டவாளத்தைக் கடக்க முயலும்போது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.