தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொருளாளா் கேசவன் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கிவைத்தாா். இதில், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன், பட்டதாரிகள் பிரிவு மாவட்டத் தலைவா் அருண்பாண்டியன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் மாரிமுத்து, முன்னாள் மாவட்டத் தலைவா் சின்னப்பன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.