விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாத பாண்டியன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.
விசாரணையில், சுப்பிரமணியபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரீஸ்வரன் (27), துளசிபட்டிகுருலட்சுமி (30), அமுதா (35), மாரீஸ்வரன் மனைவி பாண்டி லதா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25 மணல் சாக்கு பைகளையும் பறிமுதல் செய்தனா்.