கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் சாா்பில் இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மாணவா், மாணவிகளிடையே பாதுகாப்பான, இணையவழி தகவல் பரிமாற்றத்திற்கான கட்டமைப்பு எனும் தலைப்பில் நடைபெற்ற இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கில் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் சதீஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.