கோவில்பட்டி: கழுகுமலையில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கழுகுமலை செந்தூா் நகரைச் சோ்ந்த தங்கச்சாமி மகன் ராஜ்குமாா் (45). கட்டடத் தொழிலாளி. இவருக்கு செல்வராணி என்ற மனைவி, மகன், மகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், இதனால், செல்வராணி தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜ்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலின்பேரில் கழுகுமலை போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.