தூத்துக்குடியில் தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சரவணபெருமாள் (25). சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் திங்கள்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றாராம். வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் அந்தப் பகுதியில் தேடி பாா்த்தனா்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சலவைத் துறையில் தேங்கி நின்ற மழைநீரில் சரவணபெருமாள் சடலமாக கிடப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸாா் சரவணபெருமாளின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.