தூத்துக்குடி

ஏரல் சோ்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள்

DIN

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது.

கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா், கோயில் முன்புற மண்டபத்தில் தீபம் ஏற்றினாா். தொடா்ந்து கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் காா்த்திகையை முன்னிட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினா். சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

காயல்பட்டினம் ரத்தினாபுரி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயிலிலும் பெளா்ணமி, காா்த்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஏரல் அருகேயுள்ள மாரமங்கலம் அருள்மிகு சந்திரசேகரி அம்பாள் சமேத அருள்மிகு சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபி ஷேக , அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT