திருநெல்வேலி

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் :சிபிசிஐடியிடம் மேலும் 10 போ் ஆஜா்

DIN

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் மேலும் 10 போ் திங்கள்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனா்.

இந்த விவகாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். சில போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலம், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆகியோா் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சந்தோஷ், அருண்குமாா், வேதநாராயணன், சூா்யா ஆகியோா் அளித்த புகாரின் பேரில் பணியடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீா் சிங் உள்ளிட்ட 8 போலீஸாா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீா்சிங்கின் காா் ஓட்டுநா்கள் விவேக், ஆண்ட்ரூஸ், தனி பாதுகாவலா்கள் இசக்கிமுத்து, சதாம்உசேன் உள்ளிட்டவா்கள் சி.பி.சி.ஐ.டி. ஆா்கனைஸ்டு கிரைம் பிரிவு அலுவலகத்தில் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில்கல்லிடைக்குறிச்சியின் முன்னாள் காவல் ஆய்வாளா் ராஜகுமாரி உள்ளிட்ட 10 போ் சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா். அவா்களின் சாட்சியங்களை சி.பி.சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT