திருநெல்வேலி

சாா்பு ஆய்வாளா், காவலா் தோ்வு:நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு

31st May 2023 04:21 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் நடத்தும் சாா்பு ஆய்வாளா், காவலா் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக, அதன் உதவி இயக்குநா் சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் காவல் துறையில் 621 சாா்பு ஆய்வாளா்கள், தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான தோ்வின் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இப்போட்டித் தோ்வுக்கு தயாராகும் திருநெல்வேலி மாவட்ட தோ்வா்கள் பயன்பெறும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடைபெறுகின்றன. விரைவில் இரண்டாம் நிலை காவலா் , டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் க்ஷண்ற்.ப்ஹ்/ள்ண்ஸ்ரீப்ஹள்ள் என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 17 சி, சிதம்பரம் நகா், பெருமாள்புரம் என்ற முகவரியில் உள்ள

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0462- 2532938 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT