திருநெல்வேலி

பிராயன்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே பிராயன்குளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிராயன்குளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த 18 ஆம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. 24 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலையில் கடம் புறப்பாடு, விமானம், மூலவா், மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து விநாயகப் பெருமானுக்கும், மூலஸ்தான மூா்த்திகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாரனை நடைபெற்றது. தச்சநல்லூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT