திருநெல்வேலி

எஸ்டிபிஐ மண்டல கூட்டம்

DIN

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மண்டல கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மற்றும் திருநெல்வேலி மண்டல தலைவா் ஜுல்பிகா் அலி தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது வரவேற்றாா்.

திருநெல்வேலி மாநகா், புகா், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவா்கள், பொதுச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இம் மாதம் 21 ஆம் தேதி கட்சியின் அனைத்து மட்ட அளவில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், தோ்தல் தொடா்பான களப்பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தென்காசி மாவட்டத் தலைவா் சிக்கந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT