திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ரேஷன் பொருள் நுகா்வோா் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற உள்ளது.
இம்முகாமில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் குறைபாடுகள் இருந்தால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறையை 9342471314 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.