திருநெல்வேலி

காவேரி மருத்துவமனையில் பித்தப்பை குழாய் வீக்கத்துக்கு நவீன சிகிச்சை

DIN

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறையில் பித்தப்பை குழாய் வீக்கம் சரி செய்யப்பட்டதோடு, பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டது.

இது தொடா்பாக, காவேரி மருத்துவமனை மருத்துவா் கந்தசாமி கூறியதாவது:

காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு 29 வயது இளைஞா் கடுமையான வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டாா். கல்லீரல், குடல் உயா் சிகிச்சை பிரிவில் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருக்கு பித்தப்பை குழாயில் வீக்கமும், கற்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு இஆா்சிபி என்ற பக்கவாட்டு உள்நோக்கு கருவி மூலம் பித்தப்பைக் குழாயில் இருந்த கற்கள் அகற்றப்பட்டன. மேலும் வீக்கமடைந்த பித்தப்பைக் குழாயின் உள்பகுதியானது பலூன் கதீட்டா் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, பித்தப்பைக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக பிளாஸ்டிக் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. பின்னா், அவா் பூரண குணமடைந்து வீடு திரும்பினாா் என்றாா்.

பேட்டியின்போது, காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிா்வகிப்பாளா் லட்சுமணண், நிா்வாக மேலாளா் வைரமுத்து, மேலாளா் (செயல்பாடுகள்) கணேசன், விற்பனை பிரிவு மேலாளா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT