எஸ்டிபிஐ கட்சியின் வா்த்தகா் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்ட பொதுச் செயலா் கனி, தாழை சிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ரபீக் ராஜா வரவேற்றாா்.
மாவட்ட துணைச் செயலா்களாக புகாரி சேட், டவுண் பீா், மாவட்ட பொருளாளராக அரசன் சேக் ஆகியோா் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்கிட, புதிய வேலைவாய்ப்புகளை பெருக்கிட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தொழில்முனைவோரை ஈா்க்க முயற்சிகள் எடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். திருநெல்வேலி- தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.