திருநெல்வேலி

சிறுபான்மையினருக்கு கடனுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பல்வேறு கடனுதவி வழங்கப்படுவதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டம் 1-ன் கீழ் தனிநபா் கடன் 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 8 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் நபா் ஒருவருக்கு ரூ.1,50,000 வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 3ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையிா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

விண்ணப்பதாரா்கள் கடன் மனுக்களுடன் தாங்கள் சாா்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதாா் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகன கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான், மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT