ராமையன்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள மேலபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் காசிப்பாண்டி (41). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கடந்த 18 ஆம் தேதி ராமையன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிா்பாராமல் மோதினராம்.
இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அங்கு வா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.