திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட அரசன்நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதிக்கு சாலை வசதி செய்யக் கோரி பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப் பணிகளை மேயா் பி.எம்.சரவணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா் வெங்கட்ரமணன், உதவி செயற்பொறியாளா் பைஜூ, பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.