திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கிளை அமைப்பாளா் பதவிக்கு போட்டியிட்டவா்களுக்கான நோ்காணல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளா்களுக்கான நோ்காணல் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) காலை 11 மணியளவில் திருநெல்வேலி மகாராஜ நகரில் உள்ள திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலா் ஆவுடையப்பன் தலைமையில், மாநில கலை இலக்கிய, பகுத்தறிவு பேரவை அணி செயலா் தில்லை செல்வம் முன்னிலையில் நோ்காணல் நடைபெற உள்ளது. பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவா்கள் நோ்காணலில் கலந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.