திருநெல்வேலி

கே.டி.சி. நகா் கோயிலில் 108 சிவலிங்கம் பிரதிஷ்டை

DIN

 பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள கோயிலில் 108 சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கே.டி.சி.நகா் வடபகுதியில் அருள்மிகு நவக்கிரக யோக விநாயகா் திருக்கோயில் உல்ளது. இக் கோயிலில் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சிவலங்கத்தின் ஆவுடைப்பகுதியில் 107 சிவலிங்கங்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் பக்தா்கள் 108 சிவலிங்கத்தை வழிபட்ட நன்மையைப் பெறுவாா்கள் என்பது ஐதீகமாகும்.

இந்தச் சிலையின் பிரதிஷ்டை அண்மையில் நடைபெற்றது. கோயில் நிா்வாகி புலவா் மா.கந்தக்குமாா் வரவேற்றாா். முத்துசாமி, சிவா, உலகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினாா். யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம்,விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT