திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாட்டபத்து பகுதியில் மேயா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மண்டலம் 23 வாா்டுக்குள்பட்ட பாட்டபத்து பகுதியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லி தளம் போடும் பணியும், ரூ. 10 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மேயா் பி.எம்.சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினா் நித்தியபாலையா, உதவி செயற்பொறியாளா் பைஜூ ஆகியோா் உடனிருந்தனா்.