திருநெல்வேலி மாநகரில் 2 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டி (28), அருண் என்ற அருண்குமாா் (23) ஆகியோா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன், மேலப்பாளையம் உதவி ஆணையா் சதீஷ்குமாா் ஆகியோா் பரிந்துரையின்பேரில் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கூறிய இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.