திருநெல்வேலியில் கலைஞா் தமிழ் 100 இலச்சினை வெளியீட்டு விழா நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் கலைஞரின் 100 ஆவது பிறந்ததினத்தையொட்டி அவரது தமிழ் படைப்புகளை மையப்படுத்தி கலைஞா்தமிழ் 100 என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் கவிதையரங்கம் ஜூன் மாதம் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் பொதிகை தமிழ்ச்சங்கம் நடத்த வுள்ளது. இதற்கான இலட்சினை வெளியீட்டு விழாவுக்கு, பொதிகை தமிழ்ச்சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் பாளை. ராமகிருஷ்ணன் வரவேற்றாா். தமிழியக்கம் அமைப்பின் பொதுச்செயலா் வாணியம்பாடி பேராசிரியா் அப்துல்காதா், பேராசிரியா் வணங்காமுடி இருவரும் இலட்சினையை அறிமுகம் செய்தனா்.