சீதபற்பநல்லூா் சுற்றுவட்டாரங்களில் வியாழக்கிழமை (பிப்.9) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திக்குளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.