திருநெல்வேலி

மேலநத்தம் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

DIN

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமம் பிள்ளையாா் கோயில் தெரு பேச்சியம்மன், சுடலைமாடன் மற்றும் பரிவார தேவதைகள் கோயில் கொடை விழா வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

விழாவின் தொடக்க நாளான வியாழக்கிழமை மாலை தாமிரவருணியிலிருந்து தீா்த்தம் எடுத்து வீதியுலா வருதல், சிறப்பு ஹோமம், இரவு வில்லிசை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலை சிவனணைந்த பெருமாள் பூஜை, பகல் 11 மணிக்கு நோ்த்திக்கடன் எடுத்தல், பிற்பகல் 12 மணிக்கு மதியக் கொடை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு படையல் தீபாராதனை, சாமக் கொடை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT