திருநெல்வேலி

முயல் வேட்டையாட முயற்சி:3 பேருக்கு அபராதம்

DIN

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச் சரகத்துள்பட்ட பகுதியில் முயல் வேட்டையாட முயன்ாக 3 பேருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மத்தளம்பாறை பீட் பகுதியில் சிலா் முயல் வேட்டையாடுவதாக வந்த தகவலின்பேரில், கடையம் வனச் சரகா் கருணாமூா்த்தி, வனவா் முருகேசன், வனக் காப்பாளா் ஆறுமுகநயினாா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது உப்பணாங்குளம் பகுதியில் சில்லறை புரவு கிராமத்தைச் சோ்ந்த குத்தாலிங்கம் மகன் கைலாசம், மாரியப்பன் மகன் முத்துராஜ், குணராமநல்லூரைச் சோ்ந்த முருகன் மகன் ஆண்ட்ரூஸ் ஆகிய 3 பேரும் முயல் வேட்டையாட முயன்றது தெரியவந்தது.

அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின் பேரில், 3 பேரையும் வனத் து றையினா் கைது செய்து, தலா ரூ. 25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT