திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் பாய்மரப் படகுப் போட்டி நடத்த அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
நாம் தமிழா் கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளரான இடிந்தகரையைச் சோ்ந்த அ.சகாய இனிதா அளித்த மனு:
தமிழா் திருநாள்- இடிந்தகரை லூா்துமாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் கன்னியாகுமரி கோவளத்திலிருந்து இடிந்தகரை குளம்பல் வரை 20 கி.மீ. தொலைவுக்கு பாய்மரப் படகு போட்டி நடத்த உள்ளோம். இப்போட்டி நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.